• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரயில் நிலைய முற்றுகையில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியனர் கைது

December 6, 2017

கோவையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி,ரயில் நிலைய முற்றுகையில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியனர் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று இந்தியாவின் கறுப்பு தினமாக முஸ்லீம் அமைப்பினர் அனுசரித்து வருகின்றனர்.இந்நிலையில், இவ்வழக்கில் நியாமன தீர்ப்பை நீதித்துறை வழங்க வேண்டும் என்று வலியியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சியினை சேர்ந்தவர்கள் கோவை ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத் கூறுகையில்,

“பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 25 ஆண்டுகளாக நீதி கிடைக்க மக்கள் காத்திருக்கின்றனர். இவ்வழக்கில் அயோத்தியில் உள்ள அந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை ஆய்வு செய்து நியாயமான தீர்ப்பை தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும்.மேலும்,வழக்கு நிலுவையில் உள்ள போதே பி.ஜே.பி.யின் நட்பு அமைப்புகள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என பரப்புரை செய்து வருகின்றனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க