• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செல்போன் பேசியபடி பேருந்து ஓட்டிய ஓட்டுனருக்கு வினோத தண்டனை

May 11, 2018 தண்டோரா குழு

பொள்ளாச்சியில் செல்போன் பேசிக்கொண்டு தனியார் பேருந்தை ஓட்டிய ஓட்டுனருக்கு தண்டனையாக போக்குவரத்து போலீஸார் 6 மணி நேரம் டிராபிக் ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

கோவை அடுத்த பொள்ளாச்சி முள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.இவர் பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரம் நோக்கி சென்ற போது பேருந்தை செல்போன் பேசியபடி இயக்கியுள்ளர்.இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதனடிப்படையில் ஓட்டுனர் முருகானந்தத்தை விசாரித்த காவல்துறையினர் அவருக்கு வித்தியாசமான தண்டனையாக பொள்ளாச்சி காந்தி சிலை அருகே சிக்னல் டிராபிக் ஒழுங்குப்படுத்தும் பணியை மேற்கொள்ளும்மாறு உத்தரவிட்டனர்.

இதனையடுத்து மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை தொடர்ந்து 6 மணி நேரம் டிராபிக் ஒழுங்குப்படுத்தும் பணியை முருகானந்தம் மேற்கொண்டார்.அதுமட்டுமின்றி முருகானந்தம் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டியவர்களுக்கு அறிவுரையும் வழங்கினர்.

போக்குவரத்து போலீஸாரின் இந்த தண்டனை மற்ற ஓட்டுனர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் வகையில் வழங்கப்பட்டதால் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க