• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் காவலர் அருங்காட்சியகம் முதல்வர் திறப்பு

May 17, 2018 தண்டோரா குழு

கோவையில் புதுப்பிக்கட்ட காவலர் அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று(மே 17)திறந்து வைத்தார்.

கோவை ரயில் நிலையம் எதிரே,எஃப்.ஏ.ஹாமில்டன் எனும் ஆங்கிலேயே காவல் துறை அதிகாரியால் 1918-ஆம் ஆண்டு 3,488 சதுர அடியில் ஹாமில்டன் போலீஸ் கிளப் கட்டப்பட்டது.இதில்,16 அறைகள்,டேபிள் டென்னிஸ் அரங்கம், நூலகம்,சமையல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தன. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடந்தது.

அதைத்தொடர்ந்து,கோவை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அ.அமல்ராஜ் ஹாமில்டன் கிளப்பை 2016-ஆம் ஆண்டு புனரமைத்து, காவலர் அருங்காட்சியகமாக மாற்றத் திட்டமிட்டார். அதன்படி,இதற்கான பணிகள் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வந்தன.தற்போது,காவலர் அருங்காட்சியகத்தின் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் இன்று கோவை வந்த முதல்வர் அருங்காட்சியகத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார்.இவ்விழாவில் அமைச்சர் வேலுமணி டி்ஜி்பி ராஜேந்திரன்,கோவை மாநகர் காவல் துறை ஆணையர் பெரியய்யா உட்பட காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,

“இது வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகம் எனவும்,அந்த காலத்தில் இருந்து தற்போது வரை காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.144 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம்,பழமை மாறாமல் புதுபிக்கப்பட்டு காவல்துறையில் பயன்படுத்திய துப்பாக்கி,வாள் சீருடைகள் மிக சிறந்த முறையில் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் இளைஞர்களின் அறிவு பூர்வமாக திறன்மேம்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

மேலும்,கோவையில் இரவு தங்கி செல்லும் விமானத்திற்கு அரசு எரிபொருள் வரி சலுகை வழங்கி உள்ளது.இதனால்,பல்வேறு பெரிய நகரங்களுக்கு கோவையில் இருந்து விமானம் இயக்கம்படும் என தெரிவித்தார்”.

இந்த அருங்காட்சியகத்தில்,காவலர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்,சீருடைகள்,மலையூர் மம்பட்டியான்,சந்தனக் கடத்தல் வீரப்பன் ஆகியோர் பயன்படுத்திய துப்பாக்கிகள்,பீரங்கிகள், ஏவுகணைகள்,நீர் மூழ்கிக் கப்பல் போன்ற பல்வேறு அரிய பொருள்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க