• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாய்ப்பாலை தானாமாக அளித்த தாய்மார்கள்

August 2, 2018 தண்டோரா குழு

தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பிற தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக வழங்கினர்.

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தாய்ப்பால் தானம் வழங்கப்பட்டது.

கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்கள் சிலருக்கு பால் குறைந்த அளவிலேயே வருவதால்,அந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த குழந்தைகளுக்கு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தாய்மார்கள் தாய்ப்பாலை நேரடியாக வழங்கினர்.

இதனால் எந்த குழந்தைகளும் தாய்ப்பால் குடிக்காமல் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த தாய்ப்பால் தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.மேலும் தங்களுடைய குழந்தைகள் அல்லாத மற்ற குழந்தைகளுக்கு நேரடியாக தாய்ப்பால் வழங்கிய தாய்மார்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்க