• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு மாத குட்டி யானையை மீட்டு தாய் வருகைகாக காத்திருக்கும் வனத்துறை

December 12, 2017 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையத்தில் பிறந்து ஒரு மாதமேயான குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அதனை தாயுடன் இணைப்பதற்காக காத்திருக்கின்றனர்.

மேட்டுப்பாளையம் வனச்சரகம், சுண்டப்பட்டி பிரிவு, வனபத்திரகாளியம்மன் கோவிலை அடுத்து தேக்கம்பட்டி சாலையோரம், பம்ப் ஹவுஸ் அருகில் ஒரு பெண் யானை இன்று காலை சாலையில் செல்பவர்களை விரட்டியுள்ளது. இதனால் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தது.

இதையடுத்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் வன ஆர்வலர்ளுடன் இணைந்து அந்த யானையை அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதிக்குள் விரட்டினர்.எனினும் அந்த யானை மீண்டும் மீண்டும் சாலைக்கே வந்துள்ளது.

இதனால், வனத்துறையினர் அப்பகுதி முழுவதும் தீவிர தணிக்கை செய்ததனர்.அப்போது, அந்த யானையின் ஒரு வயது மதிக்கத்தக்க யானைக்குட்டி பழைய வாய்க்காலுக்குள் விழுந்ததும்அதை கவனிக்காத யானை சாலையில் செல்பவர்களை துரத்துவதும் தெரியவந்தது.

இதனையடுத்து, உடனடியாக காயம் ஏதுமின்றி குட்டியை மீட்ட வனத்துறையினர் இளநீர் தண்ணீர், குளுக்கோஸ் கொடுத்து, நெல்லிமலை வனப்பகுதிக்குள் சுமார் 200 மீ. உட்சென்று விடுவித்து, தாய் யானை வருகையை எதிர்பார்த்து உள்ளனர்.இன்று இரவிற்குள் குட்டியானையை அதன் தாய் யானையுடன் சேர்த்துவிடுவோம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க