• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குறிச்சி குளத்தில் விடப்பட்ட மூன்று இலட்சம் மீன் குஞ்சுகள்

August 16, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள குறிச்சி குளத்தில் மூன்று இலட்சம் மீன் குஞ்சுகள் இன்று விடப்பட்டுள்ளன.

கோவை பகுதியில் பருவ மழை அதிகரித்த வருவதால் குளங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.அதன்படி ஆந்திர மாநில மீன் வியாபாரிகள் மூலமாக சுமார் மூன்று இலட்சம் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டுள்ளன.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில்,

“தமிழ்நாட்டின் மொத்த நீர்ப்பரப்பு 3.63 லட்சம் ஏக்கர் ஆகும்.இதில் 2.24 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு குளங்களும்,குட்டைகளும் அமைந்துள்ளன.மீன்களில் மிக வேகமாக வளரும் கட்லா வகை மீன்கள், உண்பதற்கு மிகச் சுவையானது என கருத்படும் ரோகு மற்றும் மிர்கால் வகை மீன்கள் எங்களால் வளர்க்கப்படுகிறது.மூன்று மாதங்களில் நன்கு பலனுக்கு வரும் இந்த மீன்கள் 2 கிலோ எடையில் தொடங்கி நல்ல விலைக்கு போகும்”என தெரிவித்தனர்.

மேலும் படிக்க