• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உட்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !

November 16, 2018 தண்டோரா குழு

கஜா புயல் எதிரொலியாக கோவை உட்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,புயலாக மாறியது கஜா புயல்.இந்த கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.இந்த கஜா புயல் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்,

“கஜா புயல் இன்று காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திண்டுக்கல் அருகே நிலை கொண்டு உள்ளது.இதன் காரணமாக மதுரை,திண்டுக்கல்,தேனி,திருப்பூர்,நீலகிரி,கோவை,கரூர்,திருச்சி,நாமக்கல் மாவட்டங்களில் 24 மணி நேரங்களில் கன அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.இம்மாவட்டங்களில்,காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கும்.இன்று மதியம் முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம்.மேலும் தெற்கு வங்கக்கடலின் மத்தியில் நவ18ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் நவ18ம் தேதி முதல் 20ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்”.

மேலும் படிக்க