• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு விடுதி காப்பாளர் புனிதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

August 3, 2018 தண்டோரா குழு

கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைதான விடுதி காப்பாளர் புனிதாவை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் தர்ஷனா என்ற பெண்கள் விடுதி நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் அந்த விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவிகளை விடுதியின் உரிமையாளர் ஜெகநாதனுடன் உல்லாசமாக இருப்பதற்கு வார்டன் புனிதா அழைப்பு விடுத்துள்ளார்.இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள் விடுதியை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விடுதி காப்பாளர் புனிதா மற்றும் உரிமையாளர் ஜெகநாதன் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதைத்தொடர்ந்து விடுதி உரிமையாளர் ஜெகநாதன் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து புனிதாவை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்த நிலையில்,விடுதி வார்டன் புனிதா நேற்று கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரணடைந்த புனிதாவை நீதிபதி கண்ணன் வரும் 14 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில்,விடுதி காப்பாளர் புனிதாவை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் படிக்க