• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரே நாளில் 530 மில்லி மீட்டர் மழை பதிவு

August 14, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் சூழலில்,ஒரே நாளில் 530 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வரும் நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.கோவையில் திருச்சி சாலை,அவினாசி சாலை,காந்திபுரம்,சூலூர், உள்ளிட்ட மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 530 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.குறிப்பாக அதிகபட்சமாக சின்னகல்லாறு பகுதியில் 170 மில்லி மீட்டர் மழையும்,குறைந்த பட்சமாக பீளமேடு பகுதியில் 1 மில்லி மீட்டர் மழையளவும் பதிவாகி உள்ளது.

மேலும் சிறுவாணி அணையின்,மொத்த கொள்ளவான 49.53 அடியில்,தற்போது 47.82 அடி உள்ளது.மழை தொடர்ந்தால் இந்த வருடம் மீண்டும் சிறுவாணி அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.கோவை குற்றால அருவியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொடர்ந்து தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க