August 14, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் சூழலில்,ஒரே நாளில் 530 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வரும் நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.கோவையில் திருச்சி சாலை,அவினாசி சாலை,காந்திபுரம்,சூலூர், உள்ளிட்ட மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 530 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.குறிப்பாக அதிகபட்சமாக சின்னகல்லாறு பகுதியில் 170 மில்லி மீட்டர் மழையும்,குறைந்த பட்சமாக பீளமேடு பகுதியில் 1 மில்லி மீட்டர் மழையளவும் பதிவாகி உள்ளது.
மேலும் சிறுவாணி அணையின்,மொத்த கொள்ளவான 49.53 அடியில்,தற்போது 47.82 அடி உள்ளது.மழை தொடர்ந்தால் இந்த வருடம் மீண்டும் சிறுவாணி அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.கோவை குற்றால அருவியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொடர்ந்து தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.