• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் காரணமாக துணை தாசில்தார் உயிரிழப்பு

October 2, 2018 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை தாசில்தாராக பொறுப்பு வகித்த அப்துல் ரகுமான் சிகிச்சை பலனின்றி பலியானார்.

கூடலூரில் வட்டாட்சியராக இருந்தவர் அப்துல் ரகுமான்(43).ஆதிதிராவிடர் நலத்துறை துணை தாசில்தாராக பொறுப்பு வகித்து வரும் இவர் ஊட்டியில் உள்ள பழைய அறவங்காடு பகுதியில் வசித்து வருகிறார்.இவரின் சகோதரர் கார்கில் போரில் வீரமரணம் அடைந்துள்ளார்.இதனால் இவருக்கு அரசு பணியில் வேலை வாய்ப்பு கிடைத்தது.

இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நீலகிரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இவர் கடந்த 29ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் இவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க