• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வனவிலங்குகளின் தோல்,பல்,கொம்பு எரிப்பு

September 6, 2018 தண்டோரா குழு

வழக்குகள் முடிந்த நிலையில் வனவிலங்குகளின் தோல்,பல்,கொம்பு ஆகியவை மாவட்ட வனஅலுவலர் அலுவலகத்தில் நேற்று தீயிட்டு அழிக்கப்பட்டன.

தோல்,தந்தம்,பற்கள் உள்ளிட்டவற்றுக்காக வனவிலங்குகள் வேட்டையாடப்படுகின்றன.இவ்வாறு வனவிலங்குகள் வேட்டையில்,ஈடுபடுபவர்களை வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் வனவிலங்குகளின் உறுப்புகள்,வழக்கு முடியும் வரை மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு,வழக்கு முடிந்தவுடன் தீயிட்டு எரிக்கப்படும்.

இந்நிலையில் கோவை வனக்கோட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில்,தொடரப்பட்ட வழக்குகள் முடிந்த நிலையில் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வனவிலங்குகளின்,உடல் உறுப்புகள் நேற்று மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் தீயிட்டு அழிக்கப்பட்டன.

இதில் பெண் யானையின் கோரைப்பற்கள்,சிறுத்தையின் பல்,தோல்,யானை துதிக்கையின் தோல்,மான் கொம்பு,காட்டுமாட்டின் கொம்பு உள்ளிட்டவை எரிக்கப்பட்டதாகவும்,வழக்குகளில் தொடர்புடைய இயற்கையாக உயிரிழந்த வனவிலங்குகளின் தோல்,பல்,கொம்புகளும் இதில் அடங்கும் என மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

மேலும் படிக்க