• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விழாவை முன்னிட்டு “சமய நல்லிணக்க ஒற்றுமை பயணம்”

January 5, 2018 தண்டோரா குழு

கோவை விழா நிகழ்வினை முன்னிட்டு “சமய நல்லிணக்க ஒற்றுமை பயணம்” என்ற மைய கருத்தில் கோவையின் பல்வேறு மதவழிபாடு தலங்களுக்கு மாணவர்கள் சென்றனர்.

கோவை மக்களின் பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் பத்தாவது, ‘கோவை விழா’ கொண்டாட்டம், இன்று(ஜன 5) முதல் கோலாகலமாக துவங்குகிறது.கோவை விழா நாளொரு கொண்டாட்டமாய் தொடர்ந்து, எட்டு நாள் நடக்கும் இந்த திருவிழாவில், கலை, விளையாட்டு, இசை, இலக்கியம், உணவு முறை, தொழில்நுட்பம், மருத்துவம் என, பல்வேறு அமைப்புகள் சார்பில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கோவை விழாவை முன்னிட்டு சாந்தி ஆசிரமம் ஒவ்வொரு ஆண்டும் “சமய நல்லிணக்க ஒற்றுமை பயணம்” என்ற மையகருத்தில் கோவையின் பல்வேறு மதவழிபாடு தலங்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் நிகழ்வுவை நடத்தி வருகிறது.

அதன்படி, பத்தாவது, ‘கோவை விழா’ கொண்டாட்டம், இன்று(ஜன 5) முதல் கோலாகலமாக துவங்கியதை அடுத்து கோவையின் 25க்கும் மேற்பட்ட பள்ளியைச் சேர்ந்த 125 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழு “சமய நல்லிணக்க ஒற்றுமை பயணம்” மேற்கொண்டனர்.

முதலில் கோவை கோனியம்மன் கோவிலில் துவங்கிய இந்த பயணம் டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் சர்ச், குருத்துவாரா கோயில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஜெயின் கோயில் இறுதியாக கரும்புகடையில் உள்ள மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலில் தங்கள் பயணத்தை நிறைவு செய்தனர்.

ஒவ்வொரு வழிபாட்டு தளங்களிலும் மாணவர்களுக்கு அந்தந்த தளங்கள் குறித்த கொள்கை, கோட்பாடுகள், வழிபாட்டு முறைமைகள் குறித்து கருத்துரை நிகழ்த்தப்பட்டது.

இது குறித்து ஜஅமாத்தே இஸ்லாமி ஹிந்த் செய்தி தொடர்பாளர் அப்துல் ஹக்கீம் கூறும்போது,

“கோவையிலுள்ள சமயங்கள் மற்றும் கலாச்சாரவேறுபாடுகள் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகள்,இளைஞர்களிடையே ஏற்படுத்துதல்.மரியாதை மற்றும் பொறுப்புணர்வு பற்றிய முக்கியத்துவத்தை குழந்தைகளிடையே எடுத்துரைத்தல்.அமைதி மற்றும் நகர ஒற்றுமைக்காக குழந்தைகளுடன் சமயநிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வழிவகுத்தல்.

மேலும்,வெவ்வேறு இடங்களிலிருந்து உருவாகின்ற நதிகள் எவ்வாறு ஒரு கடலில் சங்கமம் ஆகின்றதோ அதேபோல நாம் பின்பற்றக்கூடிய சமயங்கள் பலவாக இருந்தாலும் இறைவன் ஒன்று தான்.எனவே தான் “ஒன்றேகுலம் ஒருவனே தேவன்” என்று திருமூலர் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு நல் வழிகாட்டி உள்ளார். இதைப் பின்பற்றி நம்வாழ்க்கை பயணத்தை இனிதே தொடர இந்த ஒருமைப்பயணம் ஏணிப்படியாக அமையும் என்பது நிச்சயம்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க