• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையிலும் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

August 13, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைத்தது போல,கோவை மாவட்டத்திலும் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள 27 கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரம் பல்வேறு சொகுசு விடுதிகள் இருப்பதாகவும்,இந்த கட்டிடங்கள் அனைத்தும் யானை வழித்தடப் பகுதிகளில் உள்ளதால்,இந்த கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

அந்த மனுவில்,யானை வழித்தடங்களில் கட்டிடங்கள் உள்ளதால்,யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும்,இதனால் உடனடியாக கோவை மாவட்டத்திலும் யானை வழித்தட பாதைகளை சீர் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க