• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையிலும் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

August 13, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைத்தது போல,கோவை மாவட்டத்திலும் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள 27 கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரம் பல்வேறு சொகுசு விடுதிகள் இருப்பதாகவும்,இந்த கட்டிடங்கள் அனைத்தும் யானை வழித்தடப் பகுதிகளில் உள்ளதால்,இந்த கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

அந்த மனுவில்,யானை வழித்தடங்களில் கட்டிடங்கள் உள்ளதால்,யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும்,இதனால் உடனடியாக கோவை மாவட்டத்திலும் யானை வழித்தட பாதைகளை சீர் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க