• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை

May 10, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்டது.இதனையடுத்து மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.தொடர்ந்து கோவை மாநகரின் காந்திபுரம்,அவினாசி சாலை,சிங்கநல்லலூர்,ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை ஏற்பட்டுள்ளது.கோவையில் அக்னி நட்சத்திர வெயில் துவங்கியது முதலே வெயிலின் தாக்கம் குறைவாகவும்,பலத்த மழை பெய்து வருவதாலும்,கோடை காலம் என்ற சூழல் இல்லாத நிலையில் தற்போது உள்ளது.

மேலும் படிக்க