• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் – ஒருவர் பலி

November 22, 2018 தண்டோரா குழு

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.இதில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் குளித்தலையை சேர்ந்த அஷ்ரப் முகமது அலி என்ற மாணவனை முதலாம் ஆண்டு மாணவர்களான ரோஜர் டைட்டஸ்,ரஜோ தபோபிக்,பாரதி ஆகியோர் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த மாணவனை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மூவரையும் போத்தனூர் செட்டிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்தது.

இந்த மோதல் காட்சியானது தற்போது வெளியான திமிரு பிடுச்சவன் திரைப்படத்தில் உள்ள காட்சிகள் போல் சிறு வயதில் குற்றம் செய்வோர்களுக்கு தண்டனை குறைவு என்ற கோணத்தில் கல்லூரி மாணவர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க