November 22, 2018
தண்டோரா குழு
கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.இதில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் குளித்தலையை சேர்ந்த அஷ்ரப் முகமது அலி என்ற மாணவனை முதலாம் ஆண்டு மாணவர்களான ரோஜர் டைட்டஸ்,ரஜோ தபோபிக்,பாரதி ஆகியோர் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த மாணவனை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மூவரையும் போத்தனூர் செட்டிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்தது.
இந்த மோதல் காட்சியானது தற்போது வெளியான திமிரு பிடுச்சவன் திரைப்படத்தில் உள்ள காட்சிகள் போல் சிறு வயதில் குற்றம் செய்வோர்களுக்கு தண்டனை குறைவு என்ற கோணத்தில் கல்லூரி மாணவர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.