• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காட்டு யானை சின்னத்தம்பிக்கு ரசிகர் மன்றம் துவக்கம் !

November 21, 2018 தண்டோரா குழு

கோவையில் காட்டு யானை சின்னத்தம்பிக்கு ரசிகர் மன்றம் துவங்கியுள்ளனர்.கோவையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில்,இந்த யானைகளை பிடிக்க கூடாது என பொதுமக்கள் சிலர் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில்,அந்த காட்டு யானைக்காக ரசிகர் மன்றத்தை துவக்கி உள்ளனர்.கோவை வரப்பாளையம்,பன்னிமடை,பெரிய தடாகம்,சின்னதடாகம் ஆகிய பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக காட்டு யானை விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.இந்த யானை தக்காளி,சோளம்,கரும்பு,வாழை,தென்னை உள்ளிட்ட பல பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த யானையை அடர்ந்த வன பகுதிக்கு அனுப்ப முயன்றும் பலனளிக்கவில்லை.இதனால் மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.இதற்காக சாடிவயலில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு விரட்டும் முயற்சி நடக்கிறது.இந்நிலையில் இந்த யானையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தாலும்,மறுபுறம் இதற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த காட்டு யானைகளுக்கு சின்னத்தம்பி,விநாயகன் என பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.ஏற்கெனவே,வனம் எங்களின் வாழ்விடம்! எங்களையும் வாழவிடுங்கள்! என்று அந்தப் பகுதிகளில் காட்டு யானைகளுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.இது தவிர #SaveChinnathambi #SaveVinayagan போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.இந்த சூழலில் தற்போது சின்னதடாகம்,சின்னத்தம்பி ரசிகர் மன்றம் என்ற பெயரில் அந்தப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.இதன் மூலம் தற்போது,காட்டு யானைகளுக்கான ஆதரவு பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க