• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி ஏ தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பெற்ற பொறியல் பட்டதாரி

July 31, 2018 தண்டோரா குழு

சி.ஏ தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பெற்று பொறியல் பட்டதாரி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா முழுவதும் 34,000 பேர் பட்டய கணக்காளர் தேர்வு எழுதினர்.அதில் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே,அதாவது 340 பேர் மட்டுமே பட்டய கணக்காளர் தேர்வில் இந்திய அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த தேர்வில் கோவையைச் சேர்ந்த லஷ்மணன் என்பவர் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து லஷ்மணன் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்,

“நான் பொறியியல் பட்டம் படித்துள்ளேன்.பட்டயகணக்குக்கு சம்பந்தமில்லாத பாடம் படித்து விட்டு அகில இந்திய அளவில் இரண்டாவது இடம் பெறுவதற்கு முயற்சியும்,ஆர்வமும் இருந்தாலே போதும் என தெரிவித்தார்.தன்னுடைய தந்தை ஆடிட்டராக பணிபுரிந்து வருவதாகவும் அவருடைய விருப்பத்தின் பேரில் படித்ததாகவும் அனைத்தையும் தெரிந்துகொள்ள பட்டய கணக்காளர் பணி உதவும் என தெரிவித்தார்.

மேலும்,பெஸ்ட் அகடாமியின் பயிற்சியில் பொறியியல் பட்டதாரி,பட்டய கணக்கராக முடிந்தது.இந்த அகடாமியில் படித்த பரத் ராம் என்பவர் சி ஏ இண்டர்மீடியட்டில் அகில இந்திய அளவில் 49 வது இடம் பெற்றுள்ளார்.இது தவிர சி.ஏ பவுண்டேசன் தேர்வில் அகில இந்திய அளவில் 21 வது இடமும் பெற்று பெஸ்ட் அகடாமியைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்”.

மேலும் படிக்க