August 22, 2018
தண்டோரா குழு
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பாட்டா ஷோரூமில் மின்கசிவால் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 49 லட்சம் மதிப்பள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது.
கோவை ஒப்பணக்கார வீதியில் இருக்கும் பாட்டா ஷோரூமில் பணியாளர்கள் வழக்கம் போல் கடையை மூடி சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் அந்தக் கடையிலிருந்து கரும்புகை வெளியேறியது.இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர்,விரைவாக வந்த தீயணைப்பு துறையினர் பாட்டா ஷோரூமின் ஷட்டரை உடைத்து தீயை தற்போது அனைத்து வருகின்றனர். சுமார் ஒன்பது மணிக்கு பிடித்த தீயை தற்போது வரை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல இந்த கடையிலிருந்து வெளிவரும் கரும்புகையானது ஒப்பணக்கார வீதியை சுற்றியுள்ள பகுதிகளில் பரவி வருகிறது.இதனால் 3 தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.