• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பாட்டா ஷோரூமில் தீ விபத்து

August 22, 2018 தண்டோரா குழு

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பாட்டா ஷோரூமில் மின்கசிவால் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 49 லட்சம் மதிப்பள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது.

கோவை ஒப்பணக்கார வீதியில் இருக்கும் பாட்டா ஷோரூமில் பணியாளர்கள் வழக்கம் போல் கடையை மூடி சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் அந்தக் கடையிலிருந்து கரும்புகை வெளியேறியது.இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர்,விரைவாக வந்த தீயணைப்பு துறையினர் பாட்டா ஷோரூமின் ஷட்டரை உடைத்து தீயை தற்போது அனைத்து வருகின்றனர். சுமார் ஒன்பது மணிக்கு பிடித்த தீயை தற்போது வரை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல இந்த கடையிலிருந்து வெளிவரும் கரும்புகையானது ஒப்பணக்கார வீதியை சுற்றியுள்ள பகுதிகளில் பரவி வருகிறது.இதனால் 3 தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க