• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்கள் மீண்டுவர சிறப்பு தொழுகை

August 22, 2018 தண்டோரா குழு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஆயிரக்கணக்கனோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டதோடு,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிட நிதி திரட்டி வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் தியாக திருநாளாக பக்ரீத் பண்டிகையை இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவையிலும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது.கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது.

அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்கள் மீண்டு வர வேண்டுமென தொழுகை நடத்தப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் நிதி திரப்பப்பட்டது.இல்லாதவர்களுக்கு உதவிடுவதை நோக்கமாக கொண்ட தியாக நிருநாளான பக்ரீத் பண்டிகையில் கேரள மக்களுக்கு உதவிடும் வகையில் உதவிகளை செய்து வருவதாகவும்,பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர தொழுகை நடத்தியதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.தொடர்ந்து இனிப்புகளை வழங்கியும்,ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.உணவுகளை மூன்று பகுதியாக பிரித்து ஒன்றை குடும்பத்திற்கும்,மற்றதை உறவினருக்கும், ஏழைகளுக்கும் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க