• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆட்டோ ஓட்டுனர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

August 27, 2018 தண்டோரா குழு

ஆட்டோ ஓட்டுனர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக புதிய ஆட்டோக்களை ஸ்டாண்டில் நிறுத்தக்கூடாதவாறு நடவடிக்கை எடுக்க கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையை அடுத்த காளப்பட்டி பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் வழக்கமாக இருக்கும் ஆட்கள் அல்லாது வெளியாட்கள் பலர் இந்த ஆட்டோ நிறுத்தத்தில் வந்து,இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.இதனால் ஓட்டுனர்கள் மத்தியில் தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மோதல் ஏற்படுத்தும்,வெளியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.மேலும் புதிய வாகனங்களை ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டாம் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் படிக்க