• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல் துறை அதிகாரிகள் மீது மனித உரிமை ஆணையத்திடம் புகார் – நடிகை ஸ்ருதி

August 3, 2018 தண்டோரா குழு

விசாரணையின் போது காவல் துறை அதிகாரிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமை ஆணையம்,மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளதாக நடிகை ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

கோவையில் இளைஞர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி,நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் 3வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பின்பு,செய்தியாளர்களுக்கு ஸ்ருதி பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

“தனக்கு தொடர்ந்து காவல் துறையினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் அனுப்பியுள்ளதாகவும்,அந்த ஆணையங்களிடம் ஆதாரங்களை கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடையாளம் தெரியாத எண்களில் இருந்து பலர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து
வருகின்றனர்.தன்னை கடத்தி கற்பழித்து விடுவோம் என மிரட்டல்கள் வருகின்றன எனவும் கூறிய அவர்,தொடர் மிரட்டல்களால் வெளியே நடமாட பயமாக உள்ளதாக தெரிவித்தார்.லண்டனில் படிக்க செலுத்திய 23 லட்ச ரூபாய் பணத்தை காவல் துறையினர் முடக்க முயற்சிப்பதாகவும், இந்த வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்”.

மேலும் படிக்க