• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 3 நாட்கள் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்

November 16, 2018 தண்டோரா குழு

தமிழக அரசின் உத்தரவின்படி கோவை மாநகர காவலர்களுக்காக மன அழுத்தத்தை கையாள்வது குறித்து நடைபெறும் 3 நாட்கள் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவங்கியது.

கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த பயிற்சியில் முதல் 2 நாட்களுக்கு காவலர்களுக்கும்,3ஆம் நாள் காவலர்களுடன் அவர்களது குடும்பத்தினருக்கும் அதாவது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது.மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல் ஆய்வாளர்கள் இருவர் பெங்களூர் சென்று இதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டு,இந்த பயிற்சியை வழங்குகின்றனர்.

பயிற்சியின் முதல் நாளான இன்று 80 காவலர்கள் பங்கேற்றனர்.மன அழுத்தம் ஏற்படும் வழிகள்,அதனை கண்டறிவது நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்,அமைதியான சூழலை உருவாக்கி கொள்வது என பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் காணொளி காட்சிகள் வாயிலாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க