• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 3 நாட்கள் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்

November 16, 2018 தண்டோரா குழு

தமிழக அரசின் உத்தரவின்படி கோவை மாநகர காவலர்களுக்காக மன அழுத்தத்தை கையாள்வது குறித்து நடைபெறும் 3 நாட்கள் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவங்கியது.

கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த பயிற்சியில் முதல் 2 நாட்களுக்கு காவலர்களுக்கும்,3ஆம் நாள் காவலர்களுடன் அவர்களது குடும்பத்தினருக்கும் அதாவது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது.மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல் ஆய்வாளர்கள் இருவர் பெங்களூர் சென்று இதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டு,இந்த பயிற்சியை வழங்குகின்றனர்.

பயிற்சியின் முதல் நாளான இன்று 80 காவலர்கள் பங்கேற்றனர்.மன அழுத்தம் ஏற்படும் வழிகள்,அதனை கண்டறிவது நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்,அமைதியான சூழலை உருவாக்கி கொள்வது என பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் காணொளி காட்சிகள் வாயிலாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க