• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் இலாகாக்கள் மாற்றம் – அரசியல் கட்சித்தலைவர்கள் வரவேற்பு

October 12, 2016 தண்டோரா குழு

தமிழக முதல்வர் ஜெயலிதா உடல்நலகுறைவால் கடந்த 22ம் தேதியில் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வரும் வரை, அவர் கவனித்து வந்த இலாக்காக்கள், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று அறிக்கை வெளியிட்டார்.

கவர்னரின் இந்த அறிவிப்பிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: மாநில நிர்வாக நலன் கருதி தமிழக ஆளுநர் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

கவர்னரின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். கவர்னரின் இந்த அறிவிப்பு, முதல்வரின் உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று தமிழக பா.ஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக காங் தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில் அரசு பணிகள் தொய்வின்றி நடக்க கவர்னர் எடுத்துள்ள இந்த முடிவு பாராட்டுக்குரியது.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்வாக வசதிக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும், அரசியல் அழுத்தம் இதற்கு காரணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஆளுநரின் நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க