• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சக வீரர்கள் மீது துப்பாக்கி நடத்தியதில் 3 பேர் பலி

January 12, 2017 தண்டோரா குழு

பிஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை(CISF) வீரர் தன் சக வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இது குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் சத்தியப்பிரகாஷ் வியாழக்கிழமை (ஜனவரி 12) கூறியதாவது:

நபிநகர் பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெட் (NPGCL) என்னும் நிறுவனத்தின் பாதுகாப்புப் பணியில் இருந்த போது நள்ளிரவு 12.3௦ மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட காவலர் பல்வீர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் நகரத்தை சேர்ந்தவர். இவர் இரண்டு மாதம் யோகா பயிற்சியை முடித்துவிட்டு அண்மையில்தான் பணிக்குத் திரும்பியுள்ளார்.

பணியில் இருந்தபோது விடுமுறை குறித்து எழும்பிய வாக்குவாதத்தில் பொறுமையிழந்த பல்வீர் தன்னுடைய துப்பாகியால் மற்றவர்களைச் சுட்டுள்ளார். அதில் மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்திற்குக் காரணமான பல்வீரைக் கைது செய்துள்ளோம். இச்சம்பவத்தை குறித்து அறிந்ததும் விசாரணை நடத்த மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க