• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பவானி சாகர் அணை நாளைத் திறப்பு. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

August 11, 2016 தண்டோரா குழு

ஈரோடு மாவட்ட பவானி சாகர் அணையில் இருந்து ஆயக்கட்டு நிலங்கள் பயனடையும் வகையில் நாளை முதல் தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்,

பவானி சாகர் அணையில் இருந்து ஆயக்கட்டு நிலங்களின் முதல் போகப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.

இதையடுத்து, விவசாய பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரக்கன்கோட்டை, காளிங்கராயன் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் பகுதியில் 15,743 ஏக்கர் நிலம், அரக்கன்கோட்டை பகுதியில் 24,700 ஏக்கர் நிலம் என மொத்தம் 40,247 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்

மேலும் படிக்க