• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

November 19, 2018 தண்டோரா குழு

சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி,சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்கப்படும் தமிழக முதல்வர் பழனிச்சாமி செப்டம்பர் 30ம் தேதி அறிவித்தார்.இதற்காக 2.32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதனையடுத்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.டிசம்பரில் இந்த வளைவை திறக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையில்,MGR நினைவு வளைவு அமைக்க தடை கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ்குமார் என்பவர்,உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில்,ஏற்கனவே காமராஜர் சாலையில் வைக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலை,உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். சாலை மேம்பாட்டை தவிர்த்து எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன்,பி.ராஜமாணிக்கம் அமர்வு,எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வளைவு பாதி கட்டப்பட்டுள்ள நிலையில் வழக்கு முடியும் வரை திறக்க கூடாது.வளைவு கட்டப்பட்டு வரும் இடம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை என்பதால் ஆக்கிரமிப்பாகவே கருத வேண்டும்.கட்டுமானப் பணிகளை முடித்துக்கொள்ளலாம் ஆனால் வழக்கு முடியும் வரை அதனை திறக்கக்கூடாது என உத்திரவிட்டனர்.பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும்,இது குறித்து ஜன.21க்குள் பதிலளிக்குமாறும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

மேலும் படிக்க