• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் இறந்த மூதாட்டியின் உடலை கடித்த பூனை !

November 20, 2018 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் இறந்த மூதாட்டியின் உடலை பூனை கடித்து தின்னும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்தார்.அவர் பெயர்,ஊர் போன்ற தகவல்கள் இல்லாததால் அந்த மூதாட்டியின் உடலை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் வார்டிலேயே மருத்துவமனை ஊழியர்கள் போட்டு வைத்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சுற்றி திரிந்த பூனை ஒன்று தரையில் அலட்சியமாக வைக்கப்பட்டிருந்த இறந்த பெண்ணின் உடலை தின்று கொண்டிருந்தது. இதனைக் கண்ட,சில இளைஞர்கள் புகைப்படமாக எடுத்துள்ளனர்.இதை அந்த வார்டில் நோயாளிகளின் உறவினர்கள் பார்த்து மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்த போதும் அவர்கள் உடனடியாக உடலை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் இருந்துள்ளனர்.இதனையடுத்து அங்கிருந்த நோயாளிகள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்த பின்னரே அவசர அவசரமாக இறந்த பெண்ணின் உடலை பிணவறைக்கு கொண்டு சென்றனர்.

மேலும்,அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை உடனடியாக பிணவறைக்கு கொண்டு செல்லாமல், பூனை சடலத்தை கடிக்கும் வரை மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க