• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது- சென்னை உயர்நீதிமன்றம்

January 24, 2018 தண்டோரா குழு

அரசு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில்
தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த விசாரணையில் அரசின் பேருந்து கட்டண உயர்வு முடிவில் தலையிட முடியாது என்றும்,பல பொருட்களின் விலை உயர்கிறது ஒவ்வொன்றிலும் நீதிமன்றம் எப்படி தலையிடமுடியும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும்,அனைத்து பேருந்துகளிலும் புதிய கட்டண அட்டவணையை ஒட்டுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் படிக்க