• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரத்த தானம் செய்தல் 4 நாட்கள் விடுமுறை…!

October 2, 2018 தண்டோரா குழு

இரத்த தானத்தை ஊக்குவிக்கும் விதமாக இரத்த தானம் செய்பவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்று ஜார்கண்ட் அரசு அறிவித்துள்ளது.

இரத்த தானத்தை ஊக்குவிக்கும் முயற்சியில்,இரத்த தானம் செய்பவர்களுக்கு 4 நாட்கள் சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று நூதன முறையில் விளம்பரம் வெளியிட்டு அசத்தியுள்ளது ஜார்கண்ட் மாநில அரசு.இந்த விடுமுறையை அவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறுப்பு விடுமுறையில் இணைத்து கொள்ளலாம் என்றும்,அவர்கள் விருப்பம் போல இவ்விடுமுறையை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் மருத்துவ சிகிச்சைகளுக்காக ஆண்டு தோறும் 3,50,000 யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது.ஆனால் கடந்தாண்டு வெறும் 1,90,000 யூனிட் இரத்தம் மட்டும் கிடைத்துள்ளது.இதன் காரணமாக பல மருத்துவமனைகளில் சிகிச்சையின் போது இரத்தம் கிடைக்க மிகவும் சிரமம் ஏற்படுகிறது.இதன் காரணமாகவும்,இரத்ததானத்தை அதிகரிக்கும் பொருட்டும் இந்த நூதன முயற்சியை அம்மாநில சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க