• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜாக் – நிஜ வாழ்வில் “பேட்மேன்” ஆக புகழப்பட்ட நாய்!

September 19, 2016 தண்டோரா குழு

நாய்களை செல்ல பிராணிகளாக வைத்துக்கொள்ள பலருக்கு விருப்பம்.அவைகளோடு நேரத்தை செலவிட பலருக்கும் பிடித்த ஒரு பொழுதுபோக்கு.பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் தன் பால் ஈர்க்கும் குணம் உடையது.மனிதனின் உற்ற நண்பனாக விளங்குவதால் அவற்றை வீடுகளில் வளர்க்க மக்களுக்கு அதிக விருப்பம்.

ஸ்வன்சியா ஜென் – வில்லியம் தாமஸ் என்னும் தம்பதினருடன் தாவ் நதிக்கரையில் ஜாக் வாழ்ந்து வந்தது. ஒருமுறை இங்கிலாந்தின் தாவ் நதியில் சிறுவன் ஒருவன் தவறுதலாக விழுந்துவிட்டான். தூரத்தில் இருந்து அதை கவனித்த ஜாக் ஓடிச்சென்று போராடி அச்சிறுவனை நதிக்கரைக்கு கொண்டு சென்று காப்பாற்றியது.ஆனால்,அதை நேரில் பார்க்காததால் அந்த சிறுவன் சொன்ன போதும் யாரும் அதை நம்பவில்லை.

ஆனால், சில வாரங்களுக்கு பிறகு, நீச்சல் வீரர் ஒருவர் எதிர்பாராத விதமாக அதே ஆற்றுப்பகுதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.அதை கண்ட ஜாக் உடனே சென்று அவர் சிக்கிக்கொண்டு இருந்த இடத்தில் இருந்து அவரை விடுவித்து காப்பாற்றியது.அச்சம்பவத்தை பலரும் நேரில் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.தொடர்ச்சியாக சுமார் 27 மனிதர்களை தனியொரு நாயாக இருந்து ஜாக் அவர்களை காப்பாற்றியது.

ஜாக்கின் இந்த துணிச்சலும் மனிதாபிமான அந்த செயலைகளை கெளரவிக்கும் வகையில், அதற்கு “ஆண்டின் மிகவும் தைரியமான நாய்” என்னும் பட்டத்தையும், லண்டன் மேயரிடம் இருந்த வெள்ளிப் கோப்பையையும் , மற்றும் ஜாக்கை போல் செதுக்கப்பட்ட ஒரு சிலையையும் பரிசாக அதற்கு கொடுக்கப்பட்டது.

மேலும், மக்கள் மத்தியில் அக்கால நிஜ பேட்மேனாக திகழ்ந்தது. ஜாக்கின் நினைவாக அங்கு ஆரம்பிக்கப்பட்ட பிரீமியர் லீக் கால்பந்து அணிக்கு ஸ்வான்சீ எஃப்சிக்கு பதிலாக ‘ஸ்வான்சீ ஜாக்ஸ்’ என்னும் புனைப்பெயரை தருவதற்கு ஜாக் ஒரு உத்வேகமாக இருந்தது.

மேலும் படிக்க