• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் தண்ணீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழிசை

August 21, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் நீர் மேலாண்மைக்காக உள்நாட்டு,வெளிநாட்டு நிபுணர்களையும் அழைத்து விவாதம் நடத்தி தண்ணீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழகத்தில் இருந்து பா.ஜ.க சார்பில் தொடர்ந்து கேரளாவிற்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.இன்று பாலக்காட்டிற்கு சென்று பா.ஜ.க சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட இருக்கின்றது.கேரள மாநிலத்திற்கு பாரபட்சமில்லாமல் மோடி தலைமையிலான அரசு உதவுகின்றது எனவும்,இதை சிலர் அரசியலாக்குகின்றனர் எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசு தூர்வாறுவதை முதன்மை பணியாக மேற்கொள்ள வேண்டும்.நீர் மேலாண்மைக்கான உள்நாட்டு,வெளிநாட்டு நிபுணர்களையும் அழைத்து விவாதம் நடத்தி தண்ணீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக்க கூடாது என வலியுறுத்தினார்.

தற்பொழுது மழை பெய்து வரும் தண்ணீரை சேமிக்கவும் தமிழக அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக பா.ஜ.கவும் நீர் மேலாண்மை குறித்து அதிகாரிகளிடம் சில ஆலோசனைகளை கேட்டுள்ளது எனவும்,இது தொடர்பாக பா.ஜ.க வும் தமிழக அரசிடம் சில யோசனைகளை முன் வைக்கவுள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்த மழை வெள்ளம் மூலம் கேரளா நமக்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கின்றது.சென்னையில் தூர்வாறும் பணிகளை பொதுப்பணித்துறை,மாநகராட்சி ஆகியோர் மேற்கொண்டு வருவதாகவும், இதில் இருவருக்கும் இடையே யார் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது என்ற குழுப்பம் இருக்கின்றது எனவும் இதை தமிழக அரசு தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த வேண்டும் கோரிக்கை வைத்ததை அவர்கள் ஏற்கவில்லை.இதில் உள்நோக்கம் கொண்டதா என்ற எண்ணம் தோன்றுவதாகவும்,அங்கு நாகரீகம் இருந்திருக்க வேண்டும்”இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க