• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹெச். ராஜா

October 22, 2018 தண்டோரா குழு

உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசினார்.எச் ராஜா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.எனினும் அந்த வீடியோவில் பேசியுள்ளது தமது குரல் இல்லை என்றும்,எடிட் செய்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி செல்வம்,நிர்மல் குமார் அமர்வு எச்.ராஜா நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இதையடுத்து,இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராகி ஹெச்.ராஜா விளக்கமளித்தார்.அப்போது,உணர்ச்சி மிகுதியால் தவறுதலாக பேசி விட்டதாகவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.மேலும் விளக்க மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.இதனையடுத்து ஹெச்.ராஜாவின் மன்னிப்பை ஏற்று வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் படிக்க