• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்டாலியன்களின் எண்ணிக்கையை 239 ல் இருந்து 250 ஆக உயர்த்த திட்டம்

October 7, 2016 தண்டோரா குழு

இந்தியாவில் மத்திய ரிசர்வ் படை பட்டாலியன்களின் எண்ணிக்கையை 239ல் இருந்து 250 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதே போல் அதிவிரைவு படைகளின் எண்ணிக்கையும் 15 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயக்குனர் துர்க பிரசாத் தெரிவித்துள்ளார்.

கோவை வெள்ளளூர் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படையின் ஓரு அங்கமான கலவர தடுப்பு அதிவிரைவு படை வளாகத்தில் அதன் 24 வது ஆண்டு விழா இன்று நடந்தது.இந்நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் படை இயக்குனர் துர்கபிரசாத் கலந்து கொண்டு கலவர தடுப்பு அதிவிரைவு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இதனையடுத்து சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயக்குனர் துர்க பிரசாத்,

மத்திய ரிசர்வ் படை பிரிவினர் எல்லை பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைகள், நக்சல் தடுப்பு போன்ற உள்நாட்டு பிரச்சனைகளுக்கு பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் நிலவும் எல்லை பாதுகாப்பிலும் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். மத்திய ரிசர்வ் படைக்கு என தனியாக உளவு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அந்த தகவல்களின் அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது உள்ள அதிவிரைவு படைகளின் எண்ணிக்கையை 10 லிருந்து 15 ஆக அதிகரிக்கப்படும் என்றும், மத்திய ரிசர்வ் படை பட்டாலியன்களின் எண்ணிக்கையை 239ல் இருந்து, 250 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மகளிர் பட்டாலியன்களின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , மத்திய ரிசர்வ் படையில் கடந்த ஆண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், இந்தாண்டு இதுவரை சுமார் 40 வீரர்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து குருடம்பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் மத்திய ரிசர்வ் படை இயக்குனர் துர்கபிரசாத் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க