• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை இல்லை – நிதி அமைச்சகம்

August 31, 2018 தண்டோரா குழு

செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்று சமூக வலைதளங்களில் பரவி வருவது முற்றிலும் வதந்தி என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் விடுப்பு போராட்டம் காரணமாக,அடுத்த வாரம் முழுவதும் வங்கிகள் செயல்படாது என்ற தகவல் பரவியது.செப்டம்பர் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை,3ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி,4 மற்றும் 5ம் தேதிகளில்,ரிசர்வ் வங்கி ஊழியர்கள் போராட்டம் என,தொடர்ந்து ஐந்து நாள்கள் வங்கிகள் செயல்படாது என ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல்கள் பரவியது.இது முற்றிலும் வதந்தி என,நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்,ஒரு சில மாநிலங்களில் மட்டுமே திங்கட்கிழமையன்று ஜன்மாஷ்டமி பண்டிகைக்கான விடுமுறை எனவும்,செப்டம்பர் 4-5 ஆகிய நாட்களில் பி.எஃப் மற்றும் ஓய்வூதிய பிரச்சனையை முன்வைத்து,ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மட்டுமே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இதன் காரணமாக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் செயல்பாடுகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க