• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரா்களுக்கு ஊக்கத் தொகை

August 27, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரா்களுக்கு அரசு சாா்பில் தலா ரூ.20 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் வீராங்கனைகள் இந்தியா சார்பில் கலந்து கொண்டனர்.இதில் ஸ்குவாஷ் விளையாட்டில் தமிழகத்தைச் சோ்ந்த ஜோஸ்ன சின்னப்பா,தீபிகா பல்லிக்கல்,சௌரவ் கோஷலுக்கு ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆசிய விளையாட்டு தொடரின் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பா,தீபிகா பல்லிக்கல்,சௌரவ் கோஷல் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 7 தங்கம்,10 வெள்ளி,20 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.ஆசிய விளையாட்டு போட்டியில் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி பரிசை ஒடிசா அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க