• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழர் சுட்டுக்கொலை

September 1, 2018 தண்டோரா குழு

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம்,காளஹஸ்திக்கு உட்பட்ட வனப்குதியில் செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.அப்போது கடப்பா மாவட்டம் செம்மரம் கடத்தல் தடுப்பு போலீஸார் வனப்பகுதியை சுற்றி வளைத்தனர்.பின்னர்,போலீஸார் வானத்தை நோக்கி சுட்ட போது கடத்தல்காரர்கள் கற்களை போலீஸார் மீது எறிந்தனர்.இதனால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்துனர்.அப்போது,அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இதையடுத்து இச்சம்பவம் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர்.இதற்கு முன் ஆந்திரத்தில் உள்ள சேஷாசல வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 22 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க