• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி குடும்பம் முதல் இடம்

November 16, 2017 தண்டோரா குழு

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி குடும்பம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்க நாட்டின் போர்பஸ் பத்திரிக்கை ஆசியாவின் பணக்காரர்கள் குடும்பத்தினர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, முகேஷ் அம்பானி குடும்பத்தின் நிகர மதிப்பு 19 பில்லியன் டாலரிலிருந்து 44.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இதனால் சாம்சங் நிறுவனத்தை நடத்தி வரும் லீஸ் குடும்பத்தினரை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு, அம்பானி குடும்பம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

தென் கொரியா நாட்டைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தை நிர்வாகிக்கும் லீஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 11.2 பில்லியனிலிருந்து 40.8 பில்லியன் டாலராக இவ்வாண்டு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு சாம்சங் எலெக்ட்ரானிக்சின் பங்கு 75 சதவீதமாக உயர்ந்தது தான் இந்த வளர்ச்சிக்கு காரணம்.

ஆசியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹாங்காங்கை சேர்ந்த ஹவோக் குடும்பம் 0.4 பில்லியன் டாலர்நிகர மதிப்பு பெற்று, இந்த ஆண்டு மூன்றாம் இடத்தில் உள்ளது.

தாய்லாந்தின் சரோவனோட் குடும்பத்தின் சொத்து மதிப்பு 36.6 பில்லியன் நிகர மதிப்பு பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

ஆசியாவில் முதல் 10 பணக்கார குடும்பங்களில் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய குடும்பம் அம்பானி குடும்பத்தினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க