• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக எம்எல்ஏ ஏ. கே.போஸ் மாரடைப்பால் மரணம்

August 2, 2018 தண்டோரா குழு

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்.

2016-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கே.போஸ்(69).

கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் இருந்த ஏ.கே.போஸ்க்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் கால் மூட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில்,ஏ.கே.போஸ்க்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது,மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஏ.கே.போஸ் உடல் வைக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மேலும் படிக்க