• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறையில் அடைக்கபட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி

August 13, 2018 தண்டோரா குழு

6 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்த புகாரில்,அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளராக இருந்த சின்னசாமி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் 2011 முதல் 2016 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சின்னசாமி.இவர் அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலாளராக இருந்தார்.இதற்கிடையில், சின்னசாமி கடந்த பிப்ரவரியில் அண்ணா தொழிற்சங்க பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில்,அண்ணா தொழிற்சங்கத்தின் தற்போதைய செயலாளர் ஜக்கையன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில்,சின்னசாமி 6 கோடி ரூபாய் அளவுக்கு கையாடல் செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் சின்னசாமி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவணமோசடி தடுப்பு போலீசார்,சின்னசாமியை நேற்று கோவையில் கைது செய்தனர்.

இதையடுத்து,அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.இதனைத்தொடர்ந்து அவரை 27ஆம் தேதி வரை காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க