October 30, 2018 தண்டோரா குழு
எடுத்தார். இதனால்,கோபமடைந்த சிவகுமார் அவரது மொபைல் போனை கீழே தள்ளி விட்டார்.இந்த காட்சி,சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இச்சம்பவம் தொடர்பாக நடிகர் சிவகுமாருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.
இதனையடுத்து இதுப்பற்றி விளக்கம் அளித்த சிவகுமார்,சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி,செல்பி எடுப்பது நியாயமா? நானும் மனிதன் தான். மற்றவர்களை நாம் எந்தளவு துன்புறுத்துகிறோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து நடிகர் சிவகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் ஆர்வமிக்க ரசிகர்கள், கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படி தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள்.அதை திரைப்பட கலைஞன் பொறுத்து கொள்ள தான் வேண்டும்.சிவகுமார் செல்போனை தட்டிவிட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் எனது செயலுக்காக உளமாற வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.