• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கைதிகளின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

October 6, 2016 தண்டோரா குழு

சிறையில் நீண்ட காலமாக உள்ள கைதிகளின் மன அழுத்தத்தை போக்க சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிம்முன் அன்சாரி பேட்டி அளித்துள்ளார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு கைதி அப்துல் ஒசீர் அவர்கள் நேற்று உடல் நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு காரணம் காவல் துறையின் அலட்சிய போக்கு என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.அவர் நெஞ்சு வலியால் பல முறை மருத்துவமனைக்கு வந்தும் உரிய சிகிச்சை அளிக்கவிடாமல் காவல்துறையினர் தடுத்து சிறைக்கு அழைத்து சென்று விட்டனர் எனவும் உறவினர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை சிறையில் குண்டு வெடிப்பு கைதிகளின் நிலைமையை பற்றி தெரிந்து கொள்வதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிம்முன் அன்சாரி கோவை மத்திய சிறைக்கு வந்தார்.

கைதிகளின் குறைகளை கேட்ட பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சிறையில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் மன அழுத்தத்தில் உள்ளனர். இதன் காரணமாகவே அவர்களுக்கு உடல் நிலை குறைவு ஏற்படுகிறது. அதனை தீர்க்க சிறை துறை வளாகத்திலேயே மருத்துவர்களை கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும். கைதிகளுக்கு திடீர் உடல் நிலை குறைவு ஏற்படும் பொழுது அவர்கள் உயிரை காப்பாற்ற தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள வசதிகளுடன் சிறைத்துறை மருத்துவமனை செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அப்துல்ஒசீர் அவர்கள் மரணத்திற்கு சிறை துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதனை குறித்து தமிழக அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும். மேலும் இனி ஒரு கைதி கூட இது போன்ற மரணம் நிகழாமல் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்துல் ஒசீர் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க