• Download mobile app
02 Aug 2025, SaturdayEdition - 3461
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

75வது சுதந்திர தினம்; 250கிலோ கொண்ட 76சதுர அடி பரப்பளவு கேக் தயாரித்து அசத்திய கல்லூரி மாணவர்கள்….!

August 10, 2022 தண்டோரா குழு

கோவையில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 250கிலோ எடை கொண்ட 76சதுர அடி பரப்பளவு கேக் அப்துல்கலாம் புக் ஆப் ரெக்கார்ஸ்சில் இடம் பெற்றுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் அனைத்து வீடுகளிலும் நிறுவனங்களிலும் தேசிய கொடியினை ஏற்றியும், கல்வி நிறுவனங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள்ளனர்.

இந்நிலையில் இந்த 75வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதமாகவும் 76வது சுதந்திர தினவிழாவை வரவேற்க்கும் விதமாகவும் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை மாணவர்கள் சிறுதானியங்கள் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 250கிலோ எடை கொண்ட 76 சதுர அடி பரப்பளவில் கேக் தயாரித்து அசத்தியுள்ளனர்.

இவர்களது இந்த கேக் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.கல்லூரி மாணவர்களின் இந்த சாதனையை பாராட்டி அப்துல்கலாம் புக் ஆப் ரெக்கார்ஸ் பாராட்டுகளையும் சான்றிதழ்களும் வழங்கியது.

மேலும் படிக்க