• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை

April 18, 2018 தண்டோரா குழு

தெலுங்கானாவில் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுவது போல் மருந்துகள் ஏற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தின் மெகபூப் நகரின் மையப்பகுதியில் 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது.சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் படர்ந்துள்ள இந்த ஆலமரத்தின் கிளை ஒன்று கடந்த சில காலங்களுக்கு முன்பு பூச்சிகளால் அரிக்கப்பட்டது.இதனை பெரிதாக கண்டுகொள்ளததால் இதன் தாக்கம் ஒட்டு மொத்த மரத்திற்கும் பரவி தற்போது ஆலமரம் பட்டு போகும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,இம்மரத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இதனையடுத்து,பட்டுப்போகும் நிலையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுவது போல் பூச்சிகளை கட்டுப்படுத்த தேவையான மருந்துகள் ஏற்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்க