• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

600 பணியாளர்களுடன் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

August 23, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோவை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டி, தண்ணீர் தொட்டி, தண்ணீர் தேங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருத்துகளை ஊற்றுகின்றனர். அதே போல் வீட்டில் மற்றும் அருகில் தேவையில்லாத பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கோவை மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு 6 பேர் என 100 வார்டுகளில் 600 களப்பணியாளர்கள் வீடுவீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்,’’ என்றார்.

மேலும் படிக்க