• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி அளித்து உலக சாதனை

September 10, 2022 தண்டோரா குழு

இன்று உலக முதலுதவி முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் அலெர்ட் என் ஜி ஓ இணைந்து மாபெரும் உலக சாதனையாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் அரசினர் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள், அண்ணா பல்கலைக்கழகம் மாணவ மாணவிகள்,குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள்,குமரகுரு பள்ளி மாணவ மாணவிகள்,குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் என 49 பள்ளி கல்லூரிகளில் இருந்து 5386 மாணவ மாணவிகளுக்கு மயக்கத்தில் இருப்பவரை உடனடியாக மீட்டு வருவதற்கான அடிப்படை முதல் உதவி சிகிச்சைக்கான பயிற்சிகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது.

இதனை ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட் பதிவு செய்து விருது வழங்கியுள்ளனர்.மேலும் இதில் போதைபொருளுக்கு எதிரான உறுதி மொழியை, எடுத்தனர்.இந்நிகழ்விற்கு மாணவ மாணவிகளை அழைத்து வருவதற்கு பேருந்து வசதிகள், தேவையான எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இது கோவை மாவட்டத்தை பொருத்தவரை மிக பெரிய சாதனையாக கருதப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இந்நிகழ்வு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அலெர்ட் என் ஜி ஓ நிர்வாகிகள் வேளாண் பல்கலைக்கழக அலுவலகர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க