• Download mobile app
05 Aug 2025, TuesdayEdition - 3464
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

47 வது வார்டை அனைத்து வார்டுகளுக்கும் முன் மாதிரியாக மாற்றுவேன் – அதிமுக வேட்பாளர்

February 8, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 47 வது வார்டை அனைத்து வார்டுகளுக்கும் முன் மாதிரியாக மாற்றுவேன் என அ.தி.மு.க.வேட்பாளர் ஆர்.பிரபாகரன்
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாகி உள்ளது.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வது வார்டில் கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து கவுன்சிலராக பணியாற்றியவர் பிரபாகரன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர்,தற்போது நான்காவது முறையாக அதே வார்டில் களமிறங்கி உள்ளார்.

அந்த பகுதி மக்களிடையே நன்மதிப்பை பெற்ற பிரபாகரன் அந்த பகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கோவையில் 47 வது வார்டை பொறுத்தவரை கடந்த பத்து வருடங்களில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உள்ளதாக கூறிய அவர், கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் முன் மாதிரி வார்டாக எனது வார்டை மாற்றுவேன் என உறுதி அளித்தார்.

மேலும் படிக்க