• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

3 மாதங்களுக்கு பொருட்களை வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது – அமைச்சர் காமராஜ்

July 3, 2018 தண்டோரா குழு

ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு பொருட்களை வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

3 மாதங்கள் தொடர்ந்து ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவிப்பை தமிழக அரசு பின்பற்ற கூடாது என திமுக எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன் பேரவையில் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினா் சுப்பிரமணியன் இது தொடா்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினாா்.அதற்கு பதில் அளித்த தமிழக உணவுத்துறை அமைச்சா் காமராஜ்,தொடா்ந்து 3 மாதங்கள் பொருள்கள் வாங்கவில்லை என்றாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது.மத்திய அமைச்சா் கூறியது அறிவுரை தான் என்றும்,கொள்கை முடிவு இல்லை என்றும் அமைச்சா் விளக்கம் அளித்துள்ளாா்.

மேலும் படிக்க