• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பஞ்சாப் திருமணத்தில் இளைஞர் சுட்டு நடன மங்கை மரணம்

December 5, 2016 தண்டோரா குழு

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா என்னும் இடத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 3) நடந்த ஒரு பிரமுகரின் திருமணத்தின்போது 25 வயது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

குல்விந்தர் என்ற அந்தப் பெண் நான்கு பேர் கொண்ட நடனக் குழுவைச் சேர்ந்தவர். அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா நகரில் உள்ள மூர் மண்டி என்னும் இடத்தில் நடந்த ஒரு திருமணத்தில் நடனமாட வந்துள்ளார். அந்நிகழ்ச்சியைக் காணவந்த ஓர் இளைஞர் திடீரென்று குல்விந்தரை நோக்கித் துப்பாகியால் சுட்டார். பலத்த காயமடைந்த குல்விந்தர் அந்த இடத்திலேயே சரிந்தார். உடனே, அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனையில்சேர்க்கப்படும் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

அந்தத் திருமணத்தில் குல்விந்தர் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது, மணமகனின் நண்பர்களை, அவரை அவளை மேடையில் இருந்து கீழே இறங்கி அவர்களுடன் நடனம் ஆட வற்புறுத்தினர். அதற்கு குல்விந்தர் மறுத்துவிட்டார். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்தனர். அவர்களில் ஒருவனான பில்லா என்பவர் குல்விந்தரிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அதை குல்விந்தர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், ஆத்திரம் அடைந்ததாகக் கூறப்படும் பில்லா தான் வைத்திருந்த துப்பாக்கியால் குல்விந்தரை நோக்கிச் சுட்டார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார் என்று குல்விந்தரின் கணவர் ஹர்ஜிந்தர் சிங்க் தெரிவித்தார்.

இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், கொலையாளி அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டார். பில்லா மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உண்மை தெரியவரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க