• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

22 வருடங்களுக்குப் பிறகு திருமணம் நடைபெற்ற கிராமம்!

May 7, 2018 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலத்தில் 22 வருடம் கழித்து திருமணம் நடந்து உள்ளது.ராஜஸ்தான் மாநிலம் டோலபூர் மாவட்டம் ராஜ்காட் என்ற கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இங்கு மின்சாரம், குடிநீர், சாலை, பள்ளிகள் என எந்த ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினால் டோலபூர் கிராம ஆண்களுக்கு பெண் தர மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இதன் விளைவாக ராஜ்காட் கிராமத்தில் உள்ள ஆண்களுக்கு பல ஆண்டுகளாக திருமணம் செய்யாத சூழல் ஏற்பட்டு 22 ஆண்டுகளாக அந்த கிராமத்தில் திருமண நிகழ்ச்சிகள் எதுவம் நடைபெறாமலேயே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் 22 வருடங்களாக திருமணம் நடைபெறாமல் இருத்த ராஜ்காட் கிராமத்தில் பிறந்து வளந்த அஸ்வினி பராசர் என்ற இளைஞன் ராஜஸ்தானில் உள்ள சவாய்மேன் சிங்க் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.அவர் தனது கிராமத்தின் நிலைமை குறித்து சமுகவலைதலங்களின் முலம் வெளியுலகிற்கு கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி ராஜ்காட் கிராமத்துக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதனையடுத்து தற்போது அந்த கிராமத்தில் நிலைமை சீராகி வருகிறது.
இந்நிலையில், ராஜ்காட் கிராமத்தில் பவன்குமார் என்ற இளைஞருக்கு திருமணமாகியுள்ளது.மத்திய பிரதேசத்தில் இருந்து இவருக்கு மணப்பெண் கிடைத்துள்ளது. இது ராஜ்காட் கிராமத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் திருமண நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க