• Download mobile app
01 Jul 2025, TuesdayEdition - 3429
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

21 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் ; 3000 பஞ்சாப் விவசாயிகள் ஆதரவு

April 3, 2017 தண்டோரா குழு

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 21 நாட்களாக தமிழக விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை இன்று(ஏப்ரல் 3) பஞ்சாப் கிசான் யூனியனைச் சேர்ந்த சுமார் 3000 விவசாயிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதனை அடுத்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“நாங்கள் அனாதை என்று நினைத்திருந்தோம். ஆனால் இன்று பஞ்சாப் கிசான் யூனியனைச் சேர்ந்த விவசாயிகள் 3000 பேர் எங்களை வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி எங்களை சந்தித்து பேசவில்லை என்றால் பஞ்சாப், ஹரியானா, உ.பி, உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து விவசாயிகளை ஒன்றுகூட்டி டெல்லியை முற்றுகையிடுவோம்.

வறட்சி காரணமாக வாங்கிய கடனை கட்ட முடியாமல் 2008 -ம் ஆண்டு முதல் தவித்து வருகின்றோம். எங்களுடைய பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி செய்தால் மட்டும் போதாது. நிரந்தரமான தீர்வை எட்ட வேண்டும்.
நதிகளை இணைத்து தண்ணீர் கொடுக்கும் வரை கடன் தள்ளுபடியை கேட்பது எங்களது உரிமை. அதனை செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. ஏனென்றால் மத்திய அரசால் எங்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க